கொழும்பு துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75% இலங்கையர்களுக்கே – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

Date:

நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கான சிறப்பு திறன்கள் இலங்கையருக்கு இல்லாத போது குறித்த விதிமுறைகளை தளர்த்துவதற்கு ஆணைக்குழு இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் எனவும் அதன் தலைமை இலங்கையருக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை சட்டமூலத்தில் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...