கொழும்பு துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75% இலங்கையர்களுக்கே – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

Date:

நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கான சிறப்பு திறன்கள் இலங்கையருக்கு இல்லாத போது குறித்த விதிமுறைகளை தளர்த்துவதற்கு ஆணைக்குழு இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் எனவும் அதன் தலைமை இலங்கையருக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை சட்டமூலத்தில் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...