சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்!

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதா என அவர் பொலிஸ்மா அதிபரிடம் வினவியுள்ளார்.

5 சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் முழுமை பெறாமல் உள்ளதாக அவர் குறித்த கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரண நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...