சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி தலையீடு செய்தாரா? | உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

Date:

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலையீடு செய்ததாக வெளியான தகவலை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு பொதுவாக மூன்று மாதங்கள் செல்லும். இது தடுப்பூசி உருவாக்குநர்கள் சமர்ப்பித்த தரவின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து அமையும். இதனால் ஒப்புதலுக்கு அதிக காலம் எடுக்கும்.

ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு, ஒப்புதல் அளித்ததற்கான பெருமையை இலங்கை தம்வசப்படுத்தியிருந்தது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்துரையாடியதன் விளைவாகவே சீனாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ‘zoom’ மூலம் உலக சுகாதார அமைப்பின் இயக்குநருடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அதே மாலையில் சினோபார்ம் தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று , ரத்நாயக்க கூறியிருந்தார்.

எனினும் உள்நாட்டு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்கள் நாடுகளின் விருப்பப்படி வழங்கப்படுகின்றன, ஆனால் அவை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல என்று அந்த அமைப்பு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...