சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி தலையீடு செய்தாரா? | உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

Date:

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலையீடு செய்ததாக வெளியான தகவலை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு பொதுவாக மூன்று மாதங்கள் செல்லும். இது தடுப்பூசி உருவாக்குநர்கள் சமர்ப்பித்த தரவின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து அமையும். இதனால் ஒப்புதலுக்கு அதிக காலம் எடுக்கும்.

ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு, ஒப்புதல் அளித்ததற்கான பெருமையை இலங்கை தம்வசப்படுத்தியிருந்தது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்துரையாடியதன் விளைவாகவே சீனாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ‘zoom’ மூலம் உலக சுகாதார அமைப்பின் இயக்குநருடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அதே மாலையில் சினோபார்ம் தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று , ரத்நாயக்க கூறியிருந்தார்.

எனினும் உள்நாட்டு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்கள் நாடுகளின் விருப்பப்படி வழங்கப்படுகின்றன, ஆனால் அவை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல என்று அந்த அமைப்பு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...