கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் இன்று (17) தவணை இடப்பட்டிருந்தது.
இந் நிலையில் கொவிட் -19 ஆசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு நீதிமன்றால் குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு குறித்த வழக்கின் விசாரணைகள் திகதி இடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.