சென்னையில் அம்மா உணவகம் மீது தாக்குதல் | இருவர் கைது

Date:

சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றும்படி கோரி அந்த உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது.

சென்னையில் முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை 2-3 மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று சூறையாடும் காட்சிகள் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கையில் தி.மு.க. தலைவரின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது.இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

“கோவிட் – 19 ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உணவளித்த உணவகத்தை தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்தவுடனேயே தாக்குகிறார்கள்” என்ற கருத்துடன் இந்த வீடியோ வைரலானது. பலரும் இந்த நிகழ்வு குறித்து கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அ,தி.மு.கவின் டி ஜெயகுமார், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

https://twitter.com/vijayandrewsj/status/1389471361609854976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1389471361609854976%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Ftamil%2Findia-56979380

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...