ஜெரூசலமில் இடம்பெற்ற மோதலில் பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்துள்ளனர்!!

Date:

ஜெரூசலமின் அல் அக்ஸா பள்ளிவாசல் உட்பட ஏனைய இடங்களிலும் இஸ்ரேலிய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 178 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதோடு 88பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் கடந்த பல வாரங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றதோடு கடந்த இரண்டு வாரங்களாக பதட்ட நிலை அதிகரித்துள்ளது.

பாலஸ்தீன குடியேற்றவாசிகள் இஸ்ரேலிய படையினரால் வெளியேற்றப்படுவதை எதிர்த்தே பாலஸ்தீன படையினர் போராடி வருகின்றனர்.கடந்த வாரத்தில் ஷேக் ஜர்ராவில் வசிப்பவர்களும் , பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச ஒற்றுமை அமைப்புக்களும் தமது ஆதரவை பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வழங்கியிருந்தனர்.

கடந்த சில நாட்களாக எல்லையில் உள்ள இஸ்ரேலிய பொலிஸார் கண்ணீர்ப் புகை , தோட்டாக்கள் மற்றும் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதோடு பல இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...