தரம் 1 மாணவர் அனுமதிக்கான திருத்தங்களுடனான சுற்றுநிருபம் இன்று அமைச்சரவைக்கு

Date:

தரம் 1 இல் 40 மாணவர்களை அனுமதிக்கும் திருத்தத்துடன் அடுத்த வருடம் தரம் ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு மேலதிகமாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் வேறு சில மாற்றங்கள் உள்ளடக்கியதாக புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தரம் 1க்கான அனுமதிக்காக அடுத்த மாத ஆரம்பம் முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

5 வருடங்களுக்கு முன்னர் உயர் நீதி மன்றம் வழங்கிய ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம் என்ற தீர்ப்பை பிரபல்யப் பாடசாலைகளில் மாத்திரம் சற்று மாற்றியமைத்து 40 ஆக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...