தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இழப்பீடு உண்டு

Date:

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கப்பல் கம்பெனி மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு தகவல்களை அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த தீ விபத்து மூலம் சுற்றாடலுக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர நீர்கொழும்பு கண்டல் தாவர கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது பெரும்பாலும் கட்டுப்படுத்த பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...