தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள அறிக்கை!

Date:

இந்து சமுத்திரத்தின் சுமாத்திரா தீவிற்கு அருகாமையில் கடலுக்கு அடியில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று (14) மதியம் 12.03 மணி அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த மையம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகாரம் பெற்ற உள்ளூர், வௌியூர் ஸ்தாபனங்களுடன் கலந்தாலோசித்து வௌியிடப்பட்ட அறிக்கை என அந்த மையம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...