தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள அறிக்கை!

Date:

இந்து சமுத்திரத்தின் சுமாத்திரா தீவிற்கு அருகாமையில் கடலுக்கு அடியில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று (14) மதியம் 12.03 மணி அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த மையம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகாரம் பெற்ற உள்ளூர், வௌியூர் ஸ்தாபனங்களுடன் கலந்தாலோசித்து வௌியிடப்பட்ட அறிக்கை என அந்த மையம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...