தொழிலாளர் தேசிய சங்கம் கம்பனிகளுக்கு துணை போகாது!

Date:

சந்தாவை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் கம்பனிகளின் திட்டம் நிறைவேறாது எனவும் சந்தா இல்லாவிட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை இன்னும் தீரவில்லை எனவும் தொழிலாளர்கள் கம்பனிகளின் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத தொழிலாளர்களை கம்பனிகள் அச்சறுத்தும் வகையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கம்பனிகளின் இந்த தொழிங்சங்க மற்றும் தொழிலாளர் அடக்குமுறைக்கு ஒருபோதும் துணைபோக முடியாது எனவும் இதற்கு எதிராக முன்னின்று செயற்படுவோம் என்றும் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல்...

சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...