நேற்றைய தினம் நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் விபரம்

Date:

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 3,335 பேருக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் V (sputnik v) தடுப்பூசியும், 76,942 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியும் நேற்றைய தினம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 14,673 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 150,606 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் 10,189 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 231,557 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...