நேற்றைய தினம் நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் விபரம்

Date:

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 3,335 பேருக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் V (sputnik v) தடுப்பூசியும், 76,942 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியும் நேற்றைய தினம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 14,673 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 150,606 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் 10,189 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 231,557 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...