புத்தளம் நகர பிதா கே.எ. பாயிஸின் சாரதி உள்ளிட்ட மூவர் கைது

Date:

புத்தளம் நகர சபை தலைவர் கே எ பாய்ஸ் காலமானார், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்துல் பாயிஸின் சாரதி உள்ளிட்ட மூவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மதுபோதையில் இருந்துள்ளமை போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தளம் நகர பிதா கே எ பாய்ஸ் திடீர் விபத்து ஒன்றில் நேற்று மாலை காலமானார். இந்த விபத்து தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்ற நிலையிலேயே, அவரது சாரதி உள்ளிட்ட மூவர் புத்தளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...