பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்பூட்டல்!

Date:

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தில் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா நோய் தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையை இன்று (09) மேற்கொண்டனர்.

வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ.சந்திரகுமார மற்றும் சித்தாண்டி இராணுவ படைப் பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

இதன்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன், முகக்கவசத்தினை முறையாக அணியாத பலருக்கு இதன்போது பொலிஸாரினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...