மதுபான விற்பனை நிலையங்களை மூடுங்கள்! – ஜனாதிபதியிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Date:

இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், புகைப்பிடிக்காதபடி மக்களை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதற்கும் முன்வருமாறும் ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் ஷெனால் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கும், புகைப்பிடிப்பதைத் தடுப்பதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கடைகளையும் உடனடியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், இது கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் உதவும். மக்கள் மதுபானங்களை வாங்குவதற்கும், புகைப்பிடிப்பதற்கும் அல்லது அவற்றை உட்கொள்வதற்கும் பல இடங்களில் ஒன்று கூடுவார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் நடைபெறுகின்ற விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொண்டு அங்கே ஒன்றுகூடுவார்கள்.

தற்போது கோவிட் வைரசுக்கு எதிராக நாடு போராடி வரும் சூழ்நிலையில், அந்தப் பழக்கங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், முன்னதாக கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...