முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை நீக்கம்!

Date:

நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது.

இதற்கு அமைவாக நாளை முதல் தேசிய அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்..

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக கடந்த 13 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் பயணக் கட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவித தடையுமின்றி இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...