முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை நீக்கம்!

Date:

நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது.

இதற்கு அமைவாக நாளை முதல் தேசிய அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்..

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக கடந்த 13 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் பயணக் கட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவித தடையுமின்றி இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...

உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய...