வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிர்க்கொள்ள தயார்!

Date:

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருப்பதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யஸரட்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வெள்ள நிலைமை ஏற்பட்டால் கொவிட் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் தினங்களில் மழையுடனான காலநிலை அதிகரித்து அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், நிவாரண நடவடிக்கைகளுக்காக பத்து கடற்படைக் குழுக்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் உடுகம பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலரை மீட்டுள்ளார்கள்.

வரக்காபொல – கஸ்வான பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவின் காரணமாக இரண்டு பேர் மண்ணில் சிக்கிய நிலையில், இராணுவத்தினர் அவர்களை மீட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...