2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு | மத்திய அரசு குழு எச்சரிக்கை

Date:

2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு :மத்திய அரசு குழு எச்சரிக்கை

அடுத்த 2 வாரங்களில் தமிழகம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கணிதக் கோட்பாடுகள் மூலம் கணிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கணிப்பில், தமிழகத்தில் மே 29ந் தேதியில் இருந்து 31-ஆம் தேதிக்குள்ளும், அஸ்ஸாமில் மே 21-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் மே 22-ஆம் தேதிக்குள்ளும், ஹிமாசல பிரதேசத்தில் மே 24-ஆம் தேதிக்குள்ளும், மேகாலயத்தில் மே 31-ஆம் தேதியும், திரிபுராவில் மே 27-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...