இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கொலோசியத்திற்கு இத்தாலி புதிய தளத்தை திட்டமிட்டுள்ளது.ரோமானிய அரங்கில் போராளிகள் சண்டையிட்ட போது இவை எவ்வாறு இருந்தன என்பதை உணர்த்தும் வகையில் இவை பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அசாதாரண திட்டம் என்று கலாச்சார அமைச்சர் டாரியோ பிரான்செசினி கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.கொலோசியத்தின் கம்பீரத்தை அரங்கத்தின் மையத்திலிருந்து பார்க்க கூடியதாக தெரிவித்து அதன் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பல வருட ஆய்வுக்குப் பிறகு எங்களிடம் மீண்டும் ஒரு அரங்கு இருப்பதாகவும் ,2000ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கல் அரங்கம் ரோமானியப் பேரரசின் ஆம்பித்தியேட்டராக காணப்பட்டது.இவை ஒரு காலத்தில் பிரிட்டன், எகிப்து மற்றும் துருக்கி வரை வியாபித்திருந்தது.இவை 70000 அறைகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.