60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

Date:

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 60 செயற்கைகோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டதை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள் பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட பால்கன் 9 பூஸ்டரை கொண்டு மறுசுழற்சி முறையில் இதற்கு முன் 8 முறை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டை ஏவி இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சீரான இணையதள வசதியை ஏற்படுத்த செயற்கை கோள்களை ஏவி வரும் ஸ்பேஸ் எக்ஸ்சின் ஸ்டார்லிங் நிறுவனம் இதுவரை ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை ஏவி உள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...