அலுவலக அடையாள அட்டை அல்லது உயர் அதிகாரியின் கடிதத்தைக் காண்பித்து மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும்

Date:

ஆகக் குறைந்த பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்.

ஆகக் குறைந்த மற்றும் அத்தியவசிய பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் படி அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் நடைபெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர் அல்லது உயர் அதிகாரி வழங்கும் கடிதத்தை காண்பித்து பயணிக்க முடியும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அல்லது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்ய முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...