இந்த ஆண்டு ஹஜ் கடமைகளை செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

Date:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கடுமையான உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பிரதான பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாத்ரீகர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக இந்த ஆண்டு ஹஜ் அனைத்து சுகாதார, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுடன் மே 9 ஆம் திகதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சவூதி அரேபியாவில் உள்ள சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடுவதோடு, அனைத்து மனிதகுலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சகம் கூறியது.

குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறுவன திட்டங்களை பின்னர் அறிவிப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவிற்கு பயணிப்பதைக் காணும் ஹஜ் கடந்த ஆண்டு நவீன வரலாற்றில் முதல் முறையாக குறைக்கப்பட்டது, கோவிட் -19 காரணமாக 1,000 யாத்ரீகர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...