இம்முறையும் பெருநாள் தொழுகை வீட்டிலேயே | பள்ளிவாசல்கள், பொது இடங்களில் அனுமதி இல்லை

Date:

நோன்புப் பெருநாள் தொழு­கையை பள்­ளி­வா­சல்­க­ளிலோ அல்­லது பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது என்றும் வீட்டிலேயே தொழு­து­ கொள்­ளு­மாறும் வக்பு சபை அறி­வுறுத்தியுள்ளது.

ஏற்­க­னவே அமு­லி­லுள்ள சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே நோன்புப் பெருநாள் தினத்­தன்றும் முஸ்­லிம்கள் நடந்துகொள்ள வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

‘‘பள்­ளி­வா­சல்­களில் தராவிஹ், ஜும்ஆ, பெருநாள் தொழுகை ஆகிய கூட்­டுத் ­தொ­ழு­கை­களை தொழ முடி­யாது. பள்­ளி­வா­சல்­களில் தனித்தனியே ஒரே தட­வையில் தொழு­வது 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்­ளது.

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் சுற்று நிரு­பத்தில் இது பற்றி தெளி­வாகக் குறிப்பிடப்பட்­டுள்­ளது’’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நன்றி விடிவெள்ளி

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...