இம்முறையும் பெருநாள் தொழுகை வீட்டிலேயே | பள்ளிவாசல்கள், பொது இடங்களில் அனுமதி இல்லை

Date:

நோன்புப் பெருநாள் தொழு­கையை பள்­ளி­வா­சல்­க­ளிலோ அல்­லது பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது என்றும் வீட்டிலேயே தொழு­து­ கொள்­ளு­மாறும் வக்பு சபை அறி­வுறுத்தியுள்ளது.

ஏற்­க­னவே அமு­லி­லுள்ள சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே நோன்புப் பெருநாள் தினத்­தன்றும் முஸ்­லிம்கள் நடந்துகொள்ள வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

‘‘பள்­ளி­வா­சல்­களில் தராவிஹ், ஜும்ஆ, பெருநாள் தொழுகை ஆகிய கூட்­டுத் ­தொ­ழு­கை­களை தொழ முடி­யாது. பள்­ளி­வா­சல்­களில் தனித்தனியே ஒரே தட­வையில் தொழு­வது 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்­ளது.

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் சுற்று நிரு­பத்தில் இது பற்றி தெளி­வாகக் குறிப்பிடப்பட்­டுள்­ளது’’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நன்றி விடிவெள்ளி

 

 

Popular

More like this
Related

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...