இரண்டு மில்லியன் மக்களுக்கு ஒரு பீ.சீ.ஆர் இயந்திரம் எஞ்சியவைகள் எங்கே? –நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி!

Date:

கிழக்கு மாகணத்தில் இரண்டு மில்லியன் மக்களுக்கு ஒரு பீ.சீ.ஆர் இயந்திரம் மாத்திரமே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நான் இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்காக வருகை தந்துள்ளேன். நான் ஆரம்பத்தில் தடுப்பூசி ஏற்றுவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தேன். எனக்கு முப்பது வயதுதான் என்னை விட தடுப்பூசி ஏற்ற வேண்டிய நிறையப் பேர் உள்ளமையினால் நான் தடுப்பூசி ஏற்றுவதில் ஆர்வம் கொள்ளவில்லை.

என்றாலும் சில அமைச்சர்கள் தமக்கும் உறவினர்களுக்கும் வீட்டிற்கே அழைத்து தடுப்பூசி ஏற்றியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தேன். மேலும் நான் தினந்தோறும் சுமார் 100, 200 பேர்களை தினந்தோறும் சந்திக்கின்றேன். எனவே நான் தடுப்பூசி ஏற்றுவது தவறல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலும் கிழக்கு மாகணத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை பெறுபேறுகளை பெற முடியுமான ஒரேயொரு இயந்திரம் ஆய்வகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது.

மேலும் சுமார் 2000 மேற்பட்டோர் தமது பரிசோதனை முடிவுகளை பெறாமல் காத்திருக்கின்றனர். ஏனேனில் நாளொன்றுக்கு சுமார் 500 பெறுபேறுகளே பெற முடியும். இதனால் பீ.சீஆர் பரிசோதனை பெறுபேறுகளை பெற கிழக்கு மாகணத்தில் சுமார் ஐந்து தொடக்கம் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் தனிமைப்படுத்தினால் அதற்குள் இத்தொற்று சமூகப் பரவலாக மாறிவிடுகின்றது.

கொரோனா இடுகம நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற 1700 மில்லியனில் 105 மில்லியனே ஜனவரி 31 வரை செலவிடப்பட்டுள்ளது. அந்நிதி இலங்கைப் பொதுமக்களின் பங்களிப்பாகும்.

கிழக்கு மாகணத்திற்கு ஒரேயொரு இயந்திரம்தான் உள்ளது. அவ்வியந்திரத்தின் பெறுமதி 50 மில்லியன் என்றாலும் ஒவ்வொரு மாகணத்திற்கும் இயந்திரம் கொள்வனவு செய்ய 450 மில்லியனே செலவாகும். ஆனால் சுமார் 1500 மில்லியன் மீதி உள்ளது அப்பணங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...