கொட்டாவ, கடுவெல நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு!

Date:

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்கள் இன்று (14) முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலையின் பாராமரிப்பு மற்றும் நடவடிக்கை பதில் பணிப்பாளர் நிஹால் லொட்விக் தெரிவிக்கையில் , கடுவெல பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 2 நுழைவாயில்களும் வெளியேறும் 02 நுழைவாயில்களும், கொட்டாவ பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 02 நுழைவாயில்களும், வெளியேறும் 2 நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தெற்கு அதிவேக வீதியில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளிலுள்ள நுழைவாயில்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...