கொழும்பு துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75% இலங்கையர்களுக்கே – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

Date:

நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கான சிறப்பு திறன்கள் இலங்கையருக்கு இல்லாத போது குறித்த விதிமுறைகளை தளர்த்துவதற்கு ஆணைக்குழு இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் எனவும் அதன் தலைமை இலங்கையருக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை சட்டமூலத்தில் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...