தியகல பகுதியில் மண்சரிவு!

Date:

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (13) மாலை 06 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், பொலிஸாரும் மண்மேட்டை பகுதி அளவில் அகற்றிய பின் 07 மணிக்கு பின்னர் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுகின்றது.

எனினும், வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...