தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள அறிக்கை!

Date:

இந்து சமுத்திரத்தின் சுமாத்திரா தீவிற்கு அருகாமையில் கடலுக்கு அடியில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று (14) மதியம் 12.03 மணி அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த மையம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகாரம் பெற்ற உள்ளூர், வௌியூர் ஸ்தாபனங்களுடன் கலந்தாலோசித்து வௌியிடப்பட்ட அறிக்கை என அந்த மையம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி...

இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,...

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...