புத்தளம் நகர பிதா கே.எ. பாயிஸின் சாரதி உள்ளிட்ட மூவர் கைது

Date:

புத்தளம் நகர சபை தலைவர் கே எ பாய்ஸ் காலமானார், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்துல் பாயிஸின் சாரதி உள்ளிட்ட மூவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மதுபோதையில் இருந்துள்ளமை போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தளம் நகர பிதா கே எ பாய்ஸ் திடீர் விபத்து ஒன்றில் நேற்று மாலை காலமானார். இந்த விபத்து தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்ற நிலையிலேயே, அவரது சாரதி உள்ளிட்ட மூவர் புத்தளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...