புனித தோமையார் ஆலயத்தின் மீது விழுந்த இடி, மின்னல் தாக்கம்!

Date:

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்று (06) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டது.

இன்று மதியம் இடி, மின்னல் உடன் கூடிய மழை பெய்த நிலையில் மதியம் 2.30 மணி அளவில் குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

இதன்போது, ஆலயத்தினுள் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

அனர்த்தத்தில் ஆலயத்தில் மேல் கூரை சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், பொது மக்கள் இணைந்து ஆலயத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...