வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுச்சூழலில் அதிகளவில் பொலித்தீன்கள் சேர்வதை தடுக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் வருடாந்தம் 58 பில்லியன் ரூபா செலவில் 177,197 டொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளது.

எனினும் 12,636 டொன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்களையே மீள் சுழற்சி செய்ய கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 92.29 சதவீதமானவை சுற்றுச்சூழலில் கலந்துவிடுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...