ஷானி அபேசேகரவின் பிணை மனுவை விசாரிக்க திகதி குறிப்பு!

Date:

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை இம்மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (11) மேன்முறையீட்டு நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும நீல் இத்தவெல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, ஷானி அபேசேகர சார்பில் முன்னிலையான சடடத்தரணி, தனது கட்சிக்காரர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மனு விசாரணைக்காக திகதி ஒன்றை கோரியிருந்தார்.

அதன்படி, குறித்த மனு எதிர்வரும் 19 ஆம் திகதி நிஷ்சங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...