அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கிய கொட்டியாகலை தொழிலாளர்கள்!

Date:

18 கிலோ பச்சைக்கொழுந்து பறிக்க கோரி தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலே இன்று (30) காலை முதல் உண்ணாவிரதம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

சம்பள நிர்ணய சபையினால் 1,000 ரூபாய் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கொட்டியாகலை தோட்ட நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 18 கிலோ கிராம் பச்சை தேயிலை பறிக்க வேண்டும் என கடந்த மூன்று மாத காலமாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.

 

கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 13 கிலோ பச்சை கொழுந்தே பறித்தோம் அதற்கு மேலதிகமாக பறிக்கும் பச்சைக் கொழுந்து ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வந்தது. எங்களது தொழிற்சங்கம் அறிவித்தமைக்கு அமைய மேலதிகமாக 02 கிலோவுடன் 15 கிலோ பச்சைக்கொழுந்து பறித்துக்கொடுக்க முடியும்.

 

18 கிலோ பச்சைக்கொழுந்து பறித்துக்கொடுக்க முடியாதென தெரிவித்தே உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க கட்டாயம் 18 கிலோ பச்சைக்கொழுந்து பறிப்பது அவசியம்.

 

இல்லை என்றால் தேயிலை தொழிற்துறை வீழ்சியடையும் நிலை ஏற்படும். 18 கிலோ கொழுந்து பறிக்க விட்டால் கிலோ ஒன்றுக்கு 40. ரூபாய் என்ற அடிப்படையிலே கொடுக்க முடியும் என தெரிவித்தனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...