இலங்கையில் இதுவரை 230,692 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி

Date:

இலங்கையில் நேற்றைய தினம் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் கொவிட்- 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 230,692 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை நேற்று (16) கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,667 பேர் குணமடைந்தனர்.

தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 194,145 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில்  தொற்று உறுதியான 34,232 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...