இலங்கை போக்குவரத்து சபையின் திட்டத்துக்கு இராமேஸ்வர மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Date:

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை  வடக்கு கடற்பரப்பில் இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் மீன்வளம்  அதிகரிக்கும். எனினும், இந்த செயற்பாட்டின் காரணமாக தமது வலைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு படகுகளும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நடவடிக்கைய தடுக்குமாறு கோரி நாளை (16) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராமேஸ்வரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.தேவதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...