ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சம்பியனான நியூசிலாந்து !

Date:

ஐசிசியினால் நடாத்தப்படும் முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் இந்தியா அணியை வீழ்த்தி நியுசிலாந்து அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான குறித்த போட்டி இங்கிலாந்தின் சவுத்ஹெம்ப்டனில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 170 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியில் தொடர்ச்சியாக மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 6 ஆவது நாளாகவும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனை அடுத்து போட்டியின் இறுதி நாளான இன்று நியுசிலாந்து அணிக்கு 139 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...