ஊடக ஆளுமை பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் மறைவு!

Date:

பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் கடந்த இரண்டாம் திகதி அமெரிக்காவில் வபாத்தாகினார்.பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் 1980 காலப்பகுதியில் ஆங்கில ஊடகத்துறையில் மிகவும் பிரபலம் பெற்று விளங்கினார்.கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ், தி ஐலண்ட் போன்ற பத்திரிகைகளில் தரமான ஆக்க எழுத்தாளராக இருந்து பல வாசகர்களின் ஈர்ப்பை பெற்ற ஒருவராவார்.

காலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் உலகின் மிகச் சிறந்த ஊடகவியலாளராக மதிக்கப்பட்டார்.இலங்கையின் முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவான அரிதான அறிவாளுமைகளுள் இவரும் ஒருவராவார்.அவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்தில் பெரிதும் எழுதப்பட்டுள்ளது அவை தமிழாக்கம் செய்யப்படாததால் முஸ்லிம் சமூகத்தில் பெரிதளவில் அறிமுகம் இல்லாத ஒருவரானார்.

ஊடகப் பணியிலிருந்து விலகிய அவர் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து அங்குள்ள மின்சொட்டா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்தார்.ஆழமான பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவராவார்.அவற்றில் unmooring identity என்பது அபூர்வமான ஆய்வுக் கட்டுரையாக பார்க்கப்படுகின்றது .

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...