எம்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இன்று முதல் இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளது

Date:

9883 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம்  நீர்கொழும்பு, பத்தலை , ஜா-எல மற்றும் கந்தானை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதற்கமைய நீர்கொழும்பில் 6042 வத்தளையில் 1409 குடும்பங்களுக்கும் கந்தானையில் 233  குடும்பங்களுக்கும் சாலையைச்  சேர்ந்த 69 மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டுகாக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். பிரதேச செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...