எம்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இன்று முதல் இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளது

Date:

9883 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம்  நீர்கொழும்பு, பத்தலை , ஜா-எல மற்றும் கந்தானை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதற்கமைய நீர்கொழும்பில் 6042 வத்தளையில் 1409 குடும்பங்களுக்கும் கந்தானையில் 233  குடும்பங்களுக்கும் சாலையைச்  சேர்ந்த 69 மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டுகாக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். பிரதேச செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...