எரிபொருள் விலைகள் மீண்டும் திருத்தம்??

Date:

அதிகரித்த எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறுபட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் எதிர்ப்புகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சரவை நாளை (14) பிற்பகல் 5 மணியளவில் ஒன்றுகூடவுள்ளது.கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

 

இதன்படி, 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 20 ரூபாவினாலும், 95 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 23 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

 

எனினும், அதிகரித்த எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பு சார்பிலே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

இவ்வாறான பின்னணியில் கனிய எண்ணெய் அமைச்சில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 

இந்நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சகல கருத்துக்களும் நாளை (14) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...