களனி கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கும் அபாயம்!

Date:

களனி கங்கையை அண்டிய பகுதிகள் சிலவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சீதாவக்க, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 6 முதல் 18 மணித்தியாலங்களுள் தற்போதைய வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, களனி கங்கையின் இரு மருங்குகளிலும் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை, களுகங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, மகாவலி கங்கை, மஹஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...