சீனாவில் குடியிருப்பு ஒன்றில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலி!

Date:

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் ஷியான் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று (13) எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த விபத்தில் 138 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இதன் காரணமாக உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதுடன், அந்த வர்த்தக நிலையங்களின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் என ஏராளமானோர் இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

 

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் வசித்த சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலருக்கு அதிக அளவில் இரத்தம் வெளியேறியுள்ளதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...