தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்கிறார் சாகர காரியவசம்!

Date:

இந்நாட்டு எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானம் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (16) கட்சி அலுவலகத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

 

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தனது கையெழுத்துடன் வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் தான் மற்றும் கட்சி தொடர்ந்தும் உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

 

“இரகசிய கலந்துரையாடல்கள் இல்லை. நாம் அனைத்தையும் வௌிப்படையாக செய்கிறோம். இந்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன. நாம் மக்களுக்காக எடுக்க வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் எடுப்போம். தைரியமாக அறிவிப்போம். எதிர்காலத்திலும் அப்படிதான். வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் இன்றும் நான் இருக்கிறேன். கட்சியும் அப்படிதான்.”

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...