துமிந்த சில்வாவின் விடுதலை நாட்டின் சட்டத்துக்கு அவமரியாதை | ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்

Date:

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை நாட்டின் சட்டத்துக்கு அவமரியாதை என தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஹிருணிகா பிரேமச்சந்திர கடிதம் அனுப்பியுள்ளார். பௌத்த மதத்தின்படி, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நாட்டின் தற்போதைய சட்டத்தை நிலைநிறுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளின் தீர்ப்பை குப்பையில் எறிந்து இறுதி முடிவை எடுப்பவர் நீங்கள் என்றால், இந்த நாட்டின் சட்டம் என்ன?” என்று அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி ஒரு சிலரின் கைகளில் சிப்பாயாக மாறிவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், துமிந்தா சில்வா அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலோ அல்லது அரசியலில் நுழைந்தாலோ ஆச்சரியப்பட மாட்டேன் என்றும், மக்கள் அநீதிகளை உடைக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹிருணிகாவின் தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்கு கடந்த அரசாங்கத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...