இலங்கையிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளினதும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரிடம் இருந்து அறிவிப்பு.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலைமையில், தங்களது நிரந்தர பணியிடத்தில் இருந்து தற்காலிகமாக வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு இணைப்பு காலம் முடிவடைந்த ஆசிரியர்கள் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் நிரந்தர பணியிடத்திற்கு மீள வேண்டும்.
மீண்டும் இணைப்பை நீட்ட விரும்பினால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தனது நிரந்தர பணியிடத்தில் இருந்து அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை கல்விப்பணிப்பாளர் ஊடாக (ஆசிரியர் மாற்றம் ) அனுப்பி வைக்கவேண்டும்.