நீதித்துறையுடன் தொடர்புடைய பல புதிய பதவிகளுக்கு பாராளுமன்ற சபை இணக்கம்

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நீதியரசர் சிசிரி டி ஆப்ரூவின் ஓய்வின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி ஒபேசேகரவை நியமிக்குமாறு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற் நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின்போது, இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராகவும், நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க நாடாளுமன்ற பேரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...