பால் மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை!

Date:

ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால் தாம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வருடாந்தம் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் பால் மாவினை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்கிறது.

தற்போது நாட்டின் பால் மா தேவையில் 75 சதவீதமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் சர்வதேச சந்தையில் பால் மாவின் கேள்வி மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை புள்ளிவிவரங்களின் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது நாட்டில் 4 முதல் 6 வாரங்களுக்கு தேவையான பால் மா தொகையே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...