பொசன் போயா தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி விசேட நடைமுறை!

Date:

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய பொசன் போயா தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி மாவட்ட செயலக பக்திப்பாடல் குழுவினர் பிரத்தியேக வாகனம் மூலம் பக்தி கீதங்களை நகர்சார் பிரதேங்களில் பவனிவந்து பாடும் வகையிலான ஒழுங்குகள் இன்று(24) மாலை மாவட்ட செயலக வளாகத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

தற்போது நிலவும் கொவிட் அசாதாரண சூழ்நிலையாலும் பயணக்கட்டுப்பாடுகளாலும் பக்தர்கள் பொசன் போயா தின அனுஷ்டாங்களை மேற்கொள்ளமுடியாததை முன்னிட்டே இப்பிரத்தியேக ஏற்பாடு பகதர்களின் நலன்கருதி அரசாங்க அதிபரால் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.

 

இப்பக்திபாடல் குழுவினர் முக்கியமான வீதிகளில் பாடல்களை பாடுவதுடன் நாட்டுக்கு ஆசிவேண்டியும் வலம்வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதன் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சனத் குருகுலசூரிய உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...