போதிய வெளிச்சமின்மையால் இடை நிறுத்தப்பட்ட இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி!

Date:

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, போதிய வெளிச்சமின்மையால் நேற்று இடையிடையே பாதிக்கப்பட்டது.

 

போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

விராட் கோலி 44 ஓட்டங்களுடனும், அஜின்கிஹா ரஹானே 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.சீரற்ற வானிலையால் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.

 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போதும் போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்று சந்தர்ப்பங்களில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.இன்று மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...